கருப்பினத்தவரை சவப்பெட்டியில் உயிரோடு எரிக்க முயற்சித்த விவசாயிகள்..!! (வீடியோ)
தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவரை இரண்டு விவசாயிகள் உயிரோடு சவப்பெட்டியில் வைத்து பூட்ட முயற்சி செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தின் Mpumalanga பகுதியில் உள்ள Middelburg அருகே உள்ள பண்ணையில் கடந்த ஆண்டு இரண்டு வெள்ளையின தென் ஆப்பிரிக்க விவசாயிகள் Willem Oosthuizen மற்றும் Theo Jackson, கருப்பினத்தவர் Victor Mlotshwa(27)-வை சவப்பெட்டியில் உயிரோடு வைத்து பூட்ட முயற்சி செய்தனர்.
அதுமட்டுமின்றி அந்த சவப்பெட்டியின் மேல் பெட்ரோல் ஊற்றி எரிக்க போவதாகவும், பெட்டியின் உள்ளே பாம்பை போடப் போவதாகவும் கூறியுள்ளனர், இதனால் அவர் உயிர் பயத்தில் அலறியும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
இவை அனைத்தையும் இரண்டு விவசாயிகளில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது வைரலானதால் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் தொடர்வதாகவும் இந்த வீடியோ இனவெறி மற்றும் இனவெறி தாக்குதலை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்பின் இது தொடர்பான வழக்கு கடந்த 31-ஆம் திகதி நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது அவர்கள் Victor Mlotshwa பொருட்களை திருடியிருந்ததாகவும், அவர் மேலும் திருடக்கூடாது என்பதற்காக பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இருவரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளதால், இது தொடர்பான விசாரணை 10 நாட்களுக்கு தள்ளி வைக்கபடுவதாக நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சி முடிவடைந்து 23 ஆண்டுகள் ஆகியும், தொடர்ந்து கருப்பினத்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் தொடர்ந்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இது அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
Average Rating