பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி ஏன்? ஓவியாவின் வாக்குமூலம்..!!

Read Time:2 Minute, 23 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சித்ததாக, ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியா பொலிஸாரிடம் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ரிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, நடிகை ஓவியாவின் மேனரிசம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஓவியாவுக்கு என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் உள்ள ஆரவ் என்பவரை ஓவியா காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், ஓவியாவை ஆரவ் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் கடந்த 4ம் திகதி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் காரணமாக ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்கொலைக்கு முயற்சி செய்த அன்று பொலிஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓவியாவின் இந்தத் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் புகார் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது எனக் காவல்நிலையத்துக்குச் சென்று கேட்டுள்ளார் பாலாஜி. அப்போது, காவல்துறை அதிகாரிகள் சொன்ன தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்த ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியுள்ளதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்..!!
Next post பெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்..!!