திருமணத்தை நிறுத்த இளம்பெண் செய்த செயல்..!!
சவூதி அரேபியா மக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது முதிர்ந்த ஆண் ஒருவரை மணம்முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த திருமணத்தை அந்த பெண்ணின் பெற்றோர்களே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த திருமணத்தில் அந்த இளம்பெண்ணுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.இதனையடுத்து திருமணத்தை நிறுத்த தனது நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்தியுள்ளார் இந்த அரேபிய இளம்பெண்.
மணமகனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மணமகள், திருமண ஒழுங்குகள் பற்றி பேசவேண்டும் உடனடியாக வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். உடனே மணமகன் காரில் செல்லவும் இரண்டு ஆண்கள் அவரின் முகத்தை துணியால் கட்டி கடத்தியுள்ளனர்.
கடத்திய நபர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பித்த மணமகன் அரபு போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்த போலீசாரிடம் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை எனவும் அதனால் தனது நண்பர்களிடம் 20000 ரியால் பணத்தை வழங்கி அவரை கடத்தியதாகவும் அந்த இளம்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இளம்பெண்ணை மக்காவில் உள்ள பெண்கள் நல பணிமனைக்கு மேலதிக விசாரணைகளுக்கு போலிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Average Rating