மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?..!!
பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன்?
சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் தண்ணீர் இல்லையெனில், கடுமையான அரிப்பு உண்டாகும்.
சருமத்தின் ஒரு நிலையான எக்ஸிமா, அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை உண்டாக்குவதுடன், மார்பகத்திலும் அரிப்பை ஏற்படுத்தும். இது பரம்பரை அல்லது சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக உண்டாகலாம்.
சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சினை. இது சருமத்தில் எரிச்சல் மற்றும் சிவந்த நிறத்தை உண்டாக்கும். இப்பிரச்சினை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் ஏற்படுகிறது.
மார்பக அரிப்பை தடுக்க என்ன செய்வது?
நம் சருமத்திற்கு ஏற்ற மாஸ்சுரைசரை குளித்து முடித்ததும் ஈரமான சருமத்தை சுத்தமாக துடைத்து விட்டு தடவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். இது சோப்புகளில் உள்ள கெமிக்கல் மூலம் ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.
அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும் சோப்புகள், க்ரீம்கள், எரிச்சலை ஏற்படுத்தும் சிலவகை ஆடைகள், அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
Average Rating