கணேஷ், ஆர்த்தியை காப்பற்ற மாதாவை வேண்டிய ஜூலி – நடந்து என்ன..!!
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி, ஹரிஷ், பிந்து போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் கஷ்டமான டாஸ்க்கையும் அதே சமயம் பிக் பாஸ் கொடுத்தார். அதாவது வீட்டில் இருக்கும் 10 பேர் இரண்டு அணிகளாக பிரிந்து இரண்டு பேரை போட்டிக்கு தேர்ந்து எடுக்க வேண்டும்.
டாஸ்க் என்னவென்றால் வீட்டின் வெளிப்புறத்தில் இரண்டு நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும், இரண்டு அணிகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு நபர்களை அதில் உட்கார வேண்டும். மற்ற போட்டியாளர்கள் வீட்டில் உள்ள அணைத்து குப்பைகள் , மூட்டைகள் , பச்சை தண்ணி , மாவு போன்றவத்தை அவர்கள் மேல் போட்டு எப்படியாவது ஒருத்தரை அந்த நாற்காலியில் இருந்து எழும்ப வைக்க வேண்டும்.
இந்த போட்டியில் ஆர்த்தியும் , கணேஷும் கலந்து கொண்டனர். எல்லாவற்றையும் போட்டும் அவர்கள் கடைசிவரை எழும்பவில்லை அதுமட்டுமில்லாமல் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய தொடங்கியது. இதனால் வீட்டில் உள்ள மற்றவர்கள் பதற தொடங்கினர் , ஜூலி மட்டும் தனியாக சென்று எப்படியாவது இந்த டாஸ்க்கில் இவர்களை காப்பற்று மா என்று முட்டிபோட்டு மாதாவிடம் ஜெபித்தார் .
கடைசியில் வீட்டில் உள்ளவர்கள் பலர் கெஞ்சி கேட்ட பின் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் எழுந்து டாஸ்கை முடித்தனர்.
Average Rating