பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..?..!!
உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர்.
ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பளுவில் நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிக்குண்ட நிலையில் தீயணைப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்படி நபர் 2.5 கிலோகிராம் எடையுள்ள இரும்புப் பளுவுக்குள்ளிலிருந்து தனது ஆணுறுப்பை விடுவிக்க முடியாமல் போன நிலையில் பதற்றமடைந்து தீயணைப்புப் பிரிவினரை உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜேர்மனியின் வோர்ம்ஸ் நகர தீயணைப்புப் பிரிவினர், குறித்த இரும்புப் பளுவை தகர்த்து, மேற்படி நபரை விடுவித்ள்ளனர்.
தீயணைப்புப் படையினர் இது குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளதுடன், உடைக்கப்பட்ட பளுவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Average Rating