150 கிலோ எடையை குறைக்க நினைத்த பெண்ணிற்க்கு நேர்ந்த கதி ..!!
சென்னையில் உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ள சம்வவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி 46 வயதான இவருக்கு நேற்று இரவு கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் 150 கிலோ எடையை குறைக்க அறுவை சிகிச்சை நடைபெற்ற போது பெண் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது கணவர் பொலிஸில் புகார் அளித்ததையெடுத்து கிழ்பாக்கம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதுவரை வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் இந்நிலையில் நேற்று நடந்த 9-வது அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பெண் உயிரழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Average Rating