தாயுடன் சிறை வாசம் அனுபவிக்கும் குழந்தை கண்கலங்க வைக்கும் சம்பவம்.!!
Read Time:1 Minute, 7 Second
ஆண் குழந்தையை திருடி வளர்த்து வந்த பெண்ணை பிரிய மறுத்த குழந்தையும் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆண் குழந்தையை திருடியுள்ளார் மணிமேகலை. தற்போது வேறு ஒரு குழந்தையை திருடிய சமபவத்தில் கைது செய்யபட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மணிமேகலையிடம் இருந்த அந்த ஆண் குழந்தையின் பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. எனவே குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க காவல் துறையினர் முயற்சி செய்தனர்.
ஆனால் குழந்தை மணிமேகலையிடம் இருந்து பிரிந்து வர அடம்பிடிக்கிறது. இதனால் அவருடன் குழந்தையும் சிறை வாசம் அனுபவித்துவருகிறது.
Average Rating