இரண்டு மகள்களை கருணை கொலை செய்த தந்தை கைது..!!
பாகிஸ்தான் நாட்டில் இரண்டு மகள்களை கருணை கொலை செய்த தந்தையை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பெஷாவர் நகரில் உள்ள ஆச்சர் காலி பகுதியில் அப்துல் கானி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்
இவருக்கு ஒரு மகனும், Shamim(20) மற்றும் Noreen(10) என இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில், கடந்த 20-ம் திகதி தனது இரண்டு மகள்களையும் தந்தை கருணை கொலை செய்துள்ளார்.ஆனால், இவ்விவகாரம் வெளியே வரவில்லை.
நேற்று பொலிசாரை நேரில் சந்தித்த தந்தையின் மகன் ‘எனது இரண்டு சகோதரிகளையும் தனது தந்தை கருணை கொலை செய்துவிட்டதாக’ புகார் அளித்துள்ளார்.
வாலிபரின் புகாரை பெற்ற பொலிசார் நேற்று தந்தையை கைது செய்துள்ளனர்.தந்தையிடம் விசாரணை செய்தபோது ‘என் இரண்டு மகள்களின் நடத்தை சரியில்லை. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலு வெளியே சென்றுக்கொண்டு இருந்ததால் இருவரையும் கருணை கொலை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கற்பழிப்பு மற்றும் கருணை கொலை செய்யும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது
Average Rating