மனைவியின் கள்ளக்காதலனை கொன்று உடலை எரித்த கணவர்…!!

Read Time:2 Minute, 19 Second

201709271731231777_Priest-murders-wifes-paramour-burns-off-body_SECVPFடெல்லியில் மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவன் கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் கள்ளக்காதலனை கொன்று உடலை எரித்த கணவர்
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள காந்திநகரில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகில் இன்று அதிகாலை பாதி எரிக்கப்பட்ட நிலையில் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரியான லக்கேன் துபேய் மற்றும் அவரது மனைவி இருவரும் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து லக்கேன் கொடுத்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்டவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் கோவர்தன் நகரைச் சேர்ந்த 35 வயதான சந்திர சேகர் என்பது தெரிய வந்தது. சந்திர சேகருக்கும் லக்கேனின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன் லக்கேன் தனது மனைவியுடன் புதுடெல்லிக்கு வந்து தங்கி உள்ளார்.

இந்நிலையில், லக்கேனுக்கு இந்த உறவு குறித்து தெரிய வந்தவுடன் தனது மனைவியிடம், சேகரை இங்கு வர சொல்லியிருக்கிறார். டெல்லிக்கு வந்த சேகரை லக்கேனும் அவரது மனைவியும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று கோவில் மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு துர்நாற்றம் வீசியதால் உடலை எரித்ததாக கூறினர்.

இதைத்தொடந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளர் ஓவியா..!! (வீடியோ)
Next post அமலாபால் இடத்தை பிடித்த மஞ்சிமா மோகன்…!!