மகுடி இசைக்கு பாம்பு ஆடுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?..!!
பாம்புகளை வளர்த்து வரும் பாம்பாட்டிகள் மகுடியை ஊதி அந்த இசைக்கு பாம்புகளை ஆட வைத்து வித்தை காட்டும் காட்சியை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.ஆனால் அந்த மகுடி இசைக்கு மட்டும் பாம்புகள் நடமாடுவது ஏன்? நீங்கள் யோசித்தது உண்டா?
மகுடி இசைக்கு பாம்பு ஆடுவது ஏன்?பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் இல்லாததால் இசையை அதனால் கேட்க இயலாது.ஆனால் பாம்பாட்டியின் மகுடி அசைவையும் அடிக்கடி மகுடியைத் தரையில் தட்டும் போதும் ஏற்படும் அதிர்வை மட்டும் பாம்புகள் உணரும்.
அப்போது அந்த பாம்புகள் பயத்திலும் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உடலை அசைக்குமாம்.இந்நிகழ்வு மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுவது போல தோன்றும். அதனால் தான் மகுடி இசைக்கு பாம்பு ஆடுகிறது என்ற கருத்து நிலவி வருகிறது.
அதிகபட்சம் பாம்பாட்டிகள் பயன்படுத்தும் பாம்புகளின் நச்சுப் பற்கள் அகற்றப்பட்டிருக்கும். அதன் தைரியத்தில் தான் பாம்பாட்டிகள் பயம் இல்லாமல் பாம்பு முன்பு அமர்ந்து மகுடியை இசைத்து வித்தை காட்டுகிறார்கள்.
Average Rating