கண்ணீருடன் தனது இதயத்தை தானே புதைத்த பெண்… சிலிர்க்க வைக்கும் காட்சி…!!(வீடியோ)

Read Time:1 Minute, 38 Second

22140739_406487819765872_196508850036067319_nஇதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண், தனது பழைய இருதயத்தை கண்ணீருடன் புதைத்தார்.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது இஸ்ரேலில். அந்நாட்டை சேர்ந்த நாடக கலைஞர் ஷரோன் பிடல்.

46வயதான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கர்ப்பமான ஷரோன் பிடல் இருதய நோய்க்கு உள்ளானார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்று தெரிவித்தனர்.

4 ஆண்டுகளுக்குப்பின் விபத்தில் உயிரிழந்த ஒரு இளைஞரின் இருதயம் ஷரோனுக்கு பொருத்தப்பட்டது. அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட இருதயம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

அதனை பெற்றுக்கொண்ட ஷரோன் பிடல், அதனை உடலை நல்லடக்கம் செய்வது போல் அடக்கம் செய்ய நினைத்தார். அதற்கு அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர் நகரின் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அங்கு சுமார் 4அடி குழி வெட்டி தனது இருதயத்தை தானே புதைத்தார். இருதயத்தை பிரியும்போது அவர் தேம்பிதேம்பி அழுதார். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?…!!
Next post ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த சீமான்…!!