துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி.யில் பயங்கரம்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர்நகர் மாவட்டம் நிர்காஜ்னி என்ற கிராமத்தில் ஒரு தம்பதியினர் 3 மாத குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த நான்கு பேர் தம்பதியினரை வழி மறித்துள்ளனர்.
இதனையடுத்து, கணவரை தாக்கிவிட்டு அப்பெண்ணை அருகிலுள்ள கரும்பு வயலுக்குள் இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அப்பெண் மற்றும் கணவரை அடித்து உதைத்து நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating