BiggBoss வீட்டில் ஓவியா செய்த சுட்டி தனமான வேலை- வெளியான சுவாரஸ்ய தகவல்..!!
இளைஞர்களை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி முன் உட்கார வைத்த நிகழ்ச்சி BiggBoss. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஸ் மெர்லின். இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசும்போது அவர், ஒரு நாள் இரவு 1.30 மணி இருக்கும் ஓவியா வீட்டை விட்டு வெளியே வந்தார். அன்றைக்கு சரியான புயல் காற்று வீசிக் கொண்டிருந்தது.
ஓவியா என்ன செய்கிறார் என்று எங்கள் குழு அவரை கவனிக்க ஆரம்பித்தது. கேமரா முன் பேசிக் கொண்டிருந்த அவர் நான் பேய்யுடன் பேச வேண்டும் விளக்குகளை நிறுத்துங்கள் என்று சொன்னார்.
ஆனால் அதேநேரத்தில் நாங்கள் எதுவும் செய்யாமல், திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் விளக்குகள் போய் வந்தது. ஏன் திடீரென்று விளக்குகள் நிறுத்தப்பட்டது என்று குழுவிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை, ஏன் நின்றது என்றும் தெரியவில்லை என்றனர்.
சரி ஓவியா என்ன செய்தார் என்று பார்த்தால் ஓவியா சட்டென்று ஓடிப்போய் அவரது அறையில் போய் படுத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.
Average Rating