பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் ஆண்களுடன் செல்பீ எடுத்துக்கொள்ளும் பெண்..!!
உலக அளவில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதற்கு எதிராக ஒரு சில பெண்கள் மட்டுமே துணிவாக குரல் கொடுக்கின்றனர்.
அந்த வகையில், ஆம்ஸ்டர்டாமில் படித்து வரும் 20 வயது மாணவி நோவா ஜான்ஸ்மா தன்னை வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்ஃபீ எடுத்துக் கொள்கிறார். கடந்த ஒரு மாதங்களாக இதுபோன்ற செல்பி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
சாலையில் நடந்து செல்லும்போது சில ஆண்கள் பாலியல் உறவிற்கு அழைப்பது, ஊ ஊ என ஓநாய் போல கத்துவது என பல வகையில் பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளதாக நோவா ஜான்ஸ்மா கூறியுள்ளார்.
இதற்கு எதாவது திருப்பி பேசினால் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்த இவர் இந்த யோசனையை கையில் எடுத்துள்ளார்.
தன்னை கேலி செய்யும் ஆண்களுடன் இவரே நேரில் சென்று செல்பீ எடுத்துக்கொள்ளலாமா என கேட்க துவங்கியுள்ளார். இதனால் ஆண்கள் பெருமையாக நினைப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை 24 பேருடன் தான் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதில் ஒருவர் மட்டுமே எதற்கு செல்பி என கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் சம்மந்தப்பட்டவர் டெலிட் செய்ய சொன்னால் உடனே டெலிட் செய்து விடுவாராம். ஏனென்றால் தன்னால் ஒருவருடைய குடும்பம் கெட வேண்டாம் என்னும் நல்ல எண்ணமாம்
Average Rating