நிர்வாண பூஜை செய்தால் தொழில் சிறக்கும் என கூறிய வாலிபர்.! பெண் எடுத்த முடிவு தெரியுமா?..!!
திருச்சி மேல புலிவார்டு பகுதியை சேர்ந்தவர் கவிதா. எலக்டிரிக் கடை நடத்தி வந்த இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தூத்துகுடியை சேர்ந்த தனது உறவினர் மாரியப்பன் என்பவரை அணுக்கியுள்ளார்.
அப்போது அவர் சில பூஜைகள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி திருச்சிக்கு சென்று சில பூஜைகள் செய்துள்ளனர்.அதன் பின் மாரியப்பன் செய்து வந்த ஷிப்பிங் தொழிலில் கவிதாவையும் சேர்த்து கொள்வதாக கூறியதால் கவிதா 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து தொழில் மேலும் சிறக்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை நடத்த வேண்டும். அந்த பூஜையின் முடிவின் இறுதியில் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா தான் கொடுத்த 5 லட்சம் பணத்தை திருப்பி தருமாறு கேட்கொண்டுள்ளார். பணத்தை தர மறுத்த மாரியப்பன் கவிதாவுக்கு நேரிலும் போனிலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கவிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனை அறிந்த மாரியப்பன் தலைமறைவாகிவிட்டார்.இந்நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த மாரியப்பன் பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் மாரிப்பன் போலி சாமியார் என்பது நிரூபணமானது.
மேலும் அவர் மதுரை, திருநெல்வேலி, தூத்துகுடி போன்ற இடங்களில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Average Rating