84 வயது வயோதிப பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவன்..!!
Read Time:1 Minute, 21 Second
அவுஸ்திரேலிய பேர்த் நகரிலுள்ள வீடொன்றில் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த 84 வயது வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மேற்படி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபப் பெண் பியோனா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாகியுள்ள அந்த சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் ருலன்கார் தெரிவித்தார்.
Average Rating