தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் தாடி பாலாஜி..!!
எனது குழந்தையிடம் தாடி பாலாஜி தவறாக நடக்க முயற்சி செய்தார், அதனை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக சொல்வதற்கு தயாராக இல்லை என அவரது மனைவி நித்யா கூறியுள்ளார்.
அவ்வாறு, அனைத்தையும் நான் வெளிப்படையாக கூறினால், எனது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனது குடும்ப பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளவே நான் முயற்சி செய்கிறேன், விவாகரத்து கேட்டால், என்னிடம் இருந்து உனக்கு விவாகரத்து கிடைக்காது என்றும் இல்லையேல் உனது பெயரை களங்கப்படுத்துவேன் என என்னை மிரட்டுகிறார்.
நான் ஊடங்கங்களை இவ்வாறு சந்தித்து பேசுவதற்கு, எனது குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது தாய் ஒரு தவறானவள் என்று நினைக்ககூடாது.
தற்போது, என்னை பற்றிய தவறான தகவல்களை அவர் தெரிவித்து வந்தாலும், எனது குழந்தை நான் நல்லவள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் சில வருடங்கள் கழித்து இது குறித்து அவள் முழுமையாக தெரிந்துகொள்ள வரும்போது, யாரின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என் கூறியுள்ளார்.
பாலாஜி செய்தவை அனைத்தையும் எனது மகள் கூட இருந்து பார்த்தவள், எனவே அவளுக்கு தனது தந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறாள் என கூறியுள்ளார்.
Average Rating