பாலியல் தொல்லைக்கு பயந்து ஓடும் ரெயில் இருந்து குதித்த 8-ம் வகுப்பு மாணவி..!!
மும்பையில் 8-ம் வகுப்பு மாணவி நேற்று டியூசன் முடித்து விட்டு கல்யானில் உள்ள தனது வீட்டிற்கு ரெயிலில் சென்றுள்ளார். அவர் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் தனியாக இருந்துள்ளார். சத்திரபதி சிவாஜி மகாராஜ் நிலையத்திலிருந்து ரெயில் புறப்பட்டு சென்ற போது பெண்கள் பெட்டியில் சிறுமி தனியாக இருப்பதை கண்ட ஒருவர் தாவி உள்ளே ஏறினார்.
இதை கண்ட சிறுமி கீழே இறங்க சொல்வதற்குள் அவன் சிறுமியை நோக்கி நடந்த வந்துள்ளான். இதனால் மிகவும் பயந்து போன சிறுமி ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். அதில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவேட்டில் அந்த நபரின் புகைப்படத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating