யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை: ரஜினி..!!

Read Time:2 Minute, 1 Second

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ரஜினியிடம், ‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தராததால் நான் நடிக்கவில்லை. எனவே, சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார் ரஜினி.

கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ‘2.0’ படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் சங்கருக்கு நன்றி.

பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. ‘2.0’ வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்’ என்றார்.

படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் நாளை வெளியிடப்படும். இன்னொரு பாடல் பின்னர் வெளியிடப்படும். இவை இல்லாமல் படத்தின் தீம் கலந்து சின்னச் சின்ன பாடல்கள் நிறைய இருக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு உணவு இடைவெளி தேவை..!!
Next post வெளிநாடுகளில் தமிழர் படும்(பட்ட)பாடு.. சுவிஸில் உள்ள தமிழ் அகதி முகாமில்.. -1986- **”My Mother Is In Srilanka”… (வீடியோ) ..!!