விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞர் ஆனது மகிழ்ச்சி: அருண் பாரதி..!!

Read Time:1 Minute, 28 Second

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் கவிஞர் அருண்பாரதி. இவர் இயக்குனர் கே.பாக்யராஜ் மூலம் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆனார்.

இவர் எழுதிய ‘புதிய பானையில் பழைய சோறு’ என்ற கவிதை தொகுப்பை கவிஞர் அப்துல்ரகுமான், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், லிங்குசாமி, பாண்டிராஜ், இசை அமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

தற்போது விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞராகி இருக்கும் அருண்பாரதியிடம் அதுபற்றி கேட்டபோது…

“தற்போது விஜய் ஆண்டனி நடித்து இசை அமைக்கும் ‘அண்ணாதுரை’ படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். அவர் நடிக்கும் ‘காளி’ படத்திலும் 2 பாடல்கள் எழுதி இருக்கிறேன். விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞரானது மிகவும் மகிழ்ச்சி.

இவை தவிர, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி-2’ படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் ஒருபாடல் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70 வயதுடைய முதாட்டி விளையாடிய டெபிள் டென்னிஸ் – வைரலாகும் காணொளி..!!
Next post இரவு நேர வயிற்று வலியை எப்படித் தவிர்ப்பது?..!!