தானேவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசார் முன் அடித்துக் கொலை..!!
மராட்டிய மாநிலம் தானேவில் மனநலம் பாதிக்கபட்ட வாலிபர் அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் அவரை தாக்கியுள்ளனர்.
28 வயதான அந்த வாலிபரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இரும்பு மற்றும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவை அனைத்தையும் போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் எச்.என்.காரூட் மற்றும் எஸ்.வி.கான்சேவ் ஆகிய இருவரும் நேரில் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த வாலிபர் உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் அங்குள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்படுகிறது.
Average Rating