85வயது மூதாட்டியின் வியக்க வைக்கும் செயல்!! பிச்சை எடுத்த பணத்தை கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்..!!
மைசூரு அருகே, வண்டிகோபல் பகுதியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன ஆஞ்சனேயர் திருக்கோயில் உள்ளது.
இங்கு பல காலமாக பிச்சை எடுத்து வரும் சீதா லட்சுமி என்ற மூதாட்டி தன் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை, அந்த கோயிலில் அனுமார் ஜெயந்தி அன்று வழங்கப்படும் பிரசாதத்திற்காக அனைவருக்கும் கிடைக்கும் படியாக செலவிடுங்கள் என கூறி கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அந்த மூதாட்டி கருத்து வெளியிடும் போது,
எனக்கு 85 வயதாகிறது, பல ஆண்டுகள் பிச்சை எடுத்ததன் மூலம் சேர்ந்துள்ள இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்,
இதை என்னிடம் இருந்து யாரேனும் திருடி விடுவார்கள் என்ற பயமே எனக்கு அதிகமாக உள்ளது,
அதனாக பக்தர்களிடம் யாசகமாக பெற்ற பணத்தை அவர்களுக்கே கொடுக்க தீர்மானித்து தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.
Average Rating