பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டி விட்டு வெளியூர் சென்ற மகன்..!!
Read Time:1 Minute, 18 Second
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெற்ற தாயை வீட்டிற்க்குள் வைத்து பூட்டி வீட்டு வெளியூர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான ராஜேந்திரன் தனது மனைவியுடன் பெங்களூர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். அவரது தாயை அழைத்து செல்ல மனம் இல்லாததால் அவர் தன் தாயான சற்குரு அம்மாளை வீட்டிலேயே வைத்து பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
தனியாக இருக்க பயந்த சற்குரு அம்மாள் பயந்து அக்கம் பக்கத்தினரை காப்பாற்றும் படி சத்தமிட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மூதாட்டியை மீட்டு அவரின் விருப்பபடி மகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating