தாய் வயது பெண்ணுடன் இளைஞர்… இறுதியில் நிகழ்ந்த கொடூரம்..!!
இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் தாய் வயதுடைய பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் ஓடைக்கடை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 19ம் திகதி சடலமாக கிடந்துள்ளார். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி இக்பால் மனைவி மம்முதா பீவி என்பது தெரியவந்துள்ளது.
இவரது வீட்டின் கட்டிட வேலை 3 வருடத்திற்கு முன்பு நடந்துள்ளது. அதில் வேலை செய்ய வந்த விக்னேஷ்(20) என்ற இளைஞருக்கும், இவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் கள்ளத்தொடர்பினை தெரிந்துகொண்ட கணவன் இவர்களை கண்டித்தும் மனைவி கேட்கவில்லை. இந்நிலையில் விக்கேஷிடம் மம்முதா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் தனது கள்ளத்தொடர்பு ஊர் முழுவதும் தெரிந்துவிட்டதை நினைத்து படும் கோபத்தில் இருந்துள்ள விக்னேஷை சம்பவத்தன்று போன் செய்து அழைத்துள்ளார்.
ஆத்திரத்தில் அவரைக் காண சென்ற இடத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் உச்சத்தில் மம்முதாவின் புடவை எடுத்து கழுத்தை நெறிந்து கொலை செய்துள்ளார் விக்னேஷ்.
அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாமல் இருப்பதற்கு மம்முதாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் கொத்தனாராக பணிபுரிந்த விக்னேஷ் தற்போது நகைக்கடையில் வேலை செய்துள்ளது தெரியவந்த நிலையில் பொலிசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Average Rating