மீண்டும் விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?..!!

Read Time:2 Minute, 24 Second

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘மெர்சல்’ பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒளிப்பதிவாளராக ‘அங்காமலே டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களில் பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது படத்தின் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் ’பைரவா’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நாயகியாகவும், நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. விரைவில் படம் இப்படத்தில் கதாநாயகி யார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாட்டே கதியென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா… தற்போது இவரின் பரிதாப நிலை தெரியுமா?..!!
Next post சர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்..!!