கணவனால் கொலை செய்யப்பட்ட அக்கா… அடுத்த 4 மணிநேரத்தில் திருமணம் செய்த தங்கை..!!
Read Time:1 Minute, 25 Second
டெல்லி ஆக்ராவை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மூத்த மகள் நீரஜா. இவருக்கும் ராணுவத்தில் வேலை செய்யும் புஷ்பேந்திரா என்பவருக்கும் திருமணம் ஆனது.
திருமணம் ஆன சில நாட்களிலே புஷ்பேந்திரா தனது மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் நீரஜாவின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது புதுமாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவித்தது புஷ்பேந்திராவுக்கு தெரியவந்ததால் ஆத்திரத்தில் தனது மனைவி நீரஜாவை உயிரோடு கொளுத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் ஆனது நீரஜாவின் தங்கை திருமணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் நடந்துள்ளது. இதனையடுத்து மகளின் இறுதி சடங்கை நடத்தி விட்டு அடுத்த நான்கு மணி நேரத்தில் இளைய மகளுக்கு திருமணம் நடைபெற்றது.
அக்கா இறந்ததை ஜீரணிக்க முடியாமல் அந்த பெண் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating