பிச்சைக்காரரை கோடீஸ்வரனாக மாற்றிய இளம்பெண்!! வைரலாகும் புகைப்படம்..!!
நியு ஜெர்சியில் வாழ்ந்து வருகிறார் மெல்க்யூர் என்ற பெண். இவர் ஒரு நாள் காரில் சென்றுகொண்டிருந்த போது காரில் இருந்த எரிவாயு தீர்ந்துவிடவே இவரது பயணம் தடைப்பட்டது.
உதவிக்கு யாருமற்ற நிலையில் செய்வதறியாது நின்ற போது ஜானி என்ற பெயருடைய நபரொருவர் இந்த பெண்ணிடம் வந்து நடந்தவற்றை கேட்டு விட்டு பின்னர் மாயமாக மறைந்துள்ளார்.
பின்னர் அந்த நபர் அவரிடம் இருந்த சிறிய தொகைப் பணத்தை வைத்து அந்த பெண்ணுக்கு எரிவாயு கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இருந்த கடைசி 2௦ டாலருக்கும் தான் இவர் தனக்கு உதவியிருக்கின்றார் என்று தாமதமாகவே அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. இந்தப் பெண்ணுக்கு உதவிய ஜானி அநாதரவற்ற நிலையில் இருக்கும் ஒருவர்.
இதன் பின்னர் மெல்க்யூர் தனது காதலனுடன் சேர்ந்து ஜானிக்கு உதவி செய்து வந்திருக்கின்றார்.மேலும் இவரிடம் பெற்ற நன்றிக்கடனுக்காக இணையதளத்தில் இவரின் கதையை நிதி திரட்டி அவருக்கு உதவும் நல்ல எண்ணத்தில் பதிவு செய்துள்ளார்.
இவரின் கதை இணையதளத்தில் வைரலாகவே எதிர்பாராத விதமாக உதவிகள் வந்துகொண்டே இருந்தன. தற்போது ஜானி இரண்டரைக் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக திகழ்கின்றார்.
Average Rating