நாச்சியார் படத்தில் ஆபாச வார்த்தை பேசி சர்ச்சையில் சிக்கியது ஏன்? அம்பலப்படுத்தும் ஜோதிகா..!! (வீடியோ)
நாச்சியார் படத்தில் ஆபாச வசனம் பேசியது ஏன் என்பதற்கு படத்தில் விடை அம்பலப்படுத்தும் என சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா, மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் நாச்சியார்.
இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியது. அதில் இறுதியாக இடம்பெற்றிருந்த ஜோதிகா பேசும் ஆபாச வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் தனது தோழி துவக்கியுள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு வருகை தந்த நடிகை ஜோதிகா நிருபர்களை சந்தித்தார். அப்போது நாச்சியார் பட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜோதிகா அதை பற்றி தற்போது முழுவதுமாக பேசமுடியாது என்றாலும், படம் வெளியான பின் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Average Rating