உயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்கி அதிர்ச்சியடைய வைக்கும் மக்கள்..!!
ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்க வைக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமாக இருந்து வருகிறது.தெலங்கானா மாநிலத்தில் விநியோகம் செய்யப்படும் இந்த மீன் மருத்து மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இதைச் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா நோய் முற்றிலும் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
அதனால், இந்த மீன் மருந்தை பெற்றுக்கொள்ள தெலங்கானா மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை புகழ்பெற்ற பத்தினி சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பரம்பரையாக பல ஆண்டுகள் இலவசமாக செய்து வருகின்றனர். அதாவது உயிருடன் இருக்கும் அசரை மீனின் வாயில் தாங்கள் தயாரித்து ஆஸ்துமா மருந்தை வைத்து, அதை ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுத்து விழுங்கச் செய்கின்றனர்.
அதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் திரண்டு வருகின்றனர்.
Average Rating