முகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் … பேய் போல் மாறிய கொடுமை..!!

Read Time:1 Minute, 45 Second

ஏஞ்சலினா ஜோலியின் அழகில் காதல் வயப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரியை செய்த பெண் ஒருவரின் முகம் கொடூரமாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஈரானின் டெரான் பகுதியைச் சேர்ந்த சஹர் தாபர் என்ற பெண் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். தன் அழகு ஏஞ்சலினாவை போல் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து ஏஞ்சலினா மீது காதல் அதிகரிக்கவே சஹர் தாபர் முகத்தில் மட்டும் 50 வகையான பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவிட்டுள்ளார். மேலும் உடல் எடையை டயட் இருந்து குறைத்துள்ளார். இதனால் 19 வயதான அப்பெண் தற்போது 40 வயதை தாண்டியவர் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் திருமணம் நடக்கபோகும் நேரத்தில், இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்களிடமிருந்து நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிகிறதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பார்த்த 3,18,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்..!!
Next post `விஸ்வாசம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா..!!