கரும்புள்ளியைப் போக்கும் இயற்கை பேஸ் பேக்..!!

Read Time:4 Minute, 0 Second

சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றிடும். இதற்கு அதிகமாக பணம் செலவழிக்காமல் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

பருவைத் தவிர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறையவே மறையாது என்றும் சொல்லப்படுகிறது இது தவறானது. முகத்தை முறையாக பராமரித்தால், சில குறிப்புகளை பின்பற்றினால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீங்கச் செய்திடலாம்.

* பேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

* தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

* க்ரீன் டீயில் இருக்கும் எண்ணற்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதற்கு பயன்படுத்திய டீ இலைகளை பயன்படுத்தலாம். க்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.

* பட்டையை முதலில் பொடியாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடலாம். வேண்டுமானால் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இது நிறைந்த பலனைத் தரும்.

* தினமும் எலுமிச்சை பாதியாக நறுக்கி அதை அப்படியே முகத்தில் தேய்க்கலாம். அதிக எரிச்சல் இருந்தால் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம். எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும்.

* உருளைக்கிழங்கினை பேஸ்ட் செய்து சருமத்தில் மாஸ்க்காக போடலாம், அல்லது உருளைக் கிழங்கை நறுக்கி முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். உருளைக்கிழங்கு அரைத்து சாறு எடுத்து அதனையும் தடவலாம். இப்படிச் செய்வதால் சருமத்திற்கு சிறந்த ப்ளீச்சிங் செய்த பலன் தோன்றும். இதனை நீங்கள் வாரம் இரண்டு முறை செய்திடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஈடுபாடே இல்லாம இருக்கா? காரணம் மற்றும் தீர்வுகள் இதோ..!!
Next post விஜய் 62 படக்குழுவின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!