பொதுஇடத்தில் 16 வயது சிறுவனுடன் ஆசிரியையின் முகம்சுழிக்கும் செயல்..!
அமெரிக்காவில் பூங்காவில் 16 வயது மாணவனுடன் 28 வயது முன்னாள் டீச்சர் தகாத முறையில் நடந்து கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பெனிங்டன்னில் உள்ள பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அலிசியா மரி ரெட்டி (28) என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை பணியாற்றி வந்தார்.
பால்டிமோரில் வசித்து வரும் இவர் கடந்த ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவனுடன் நெருங்கி பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து பொது இடம் என்றும் பாராமல் பூங்காவில் அந்த சிறுவனுடன் தகாத உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தவுடன் போலிஸில் அந்த டீச்சர் மீது புகார் கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.
அவர் பால்டிமோரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த டீச்சரின் மீது இதுமாதிரியான புகார்கள் எழுந்ததில்லை என்று பழைய இடத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் இந்திய வம்சாவளி பெண் என்றும் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது
Average Rating