தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!
Read Time:1 Minute, 14 Second
மணமகளிடம் திருமணத்தின்போது ரூபாய் ஒரு கோடி வரதட்சனை கேட்ட மணமகன் வீட்டாரால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் அனில் சக்சேனா. இவரது மகள் பல் மருத்துவர் ராஷிக்கும், ஷாக்ஷம் மடோக் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் திருமணம் நடப்பதற்கு சில நேரங்களில் மணமகன் குடும்பத்தார் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளனர். சொகுசு கார், தங்க நாணயம் என வரதட்சனைக் கொடுத்தும் மேலும் இப்படி கேட்பது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியாக்கியது. தனக்கு திருமணம் வேண்டாம் திருமணத்தை நிறுத்துங்கள் என்று மணமகள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மணமகள் வீட்டார் வரதட்சனை கொடுமை என பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
Average Rating