பிரபுதேவாவுடன் செல்போனில் மணிகணக்கில் பேச ஆரம்பித்த நயன்தாரா… விக்னேஷ் சிவனின் நிலைமை என்ன?..!!
லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். பின் பிரபுதேவாவை காதலித்தார். அவரது பெயரை பச்சைகுத்தி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
பின் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. சில நாட்களுக்கு படங்கள் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்டீரி கொடுத்தார்.
தற்போது விக்னேஷ் சிவன், தன் புதிய காதலருக்காக உருகிய நயன்தாரா அவருக்கு சொகுசு கார், ஆடம்பரமான ப்ளாட் என அள்ளிக் கொடுத்தார். விரைவில் விக்னேஷ்சிவனை கரம்பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் பிரபுதேவாவுடன் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா சென்னைக்கு வந்தால் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஸ்டார் ஹொட்டலில்தான் தங்குவார். அதே ஹொட்டலில் நயன்தாராவுக்கும் நிரந்தர அறை உண்டு. அங்கு தான் அவர் இயக்குனர்களை சந்தித்து கதை கேட்பாராம். அங்குதான் பிரபுதேவாவை சந்தித்து பேசியிருக்கிறார் நயன்தாரா.
இருவருக்கும் இடையிலான தனிமை சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது. அந்த சந்திப்பில் நயன்தாரா கதறி அழுதார் என்றும் தகவல் தெரியவந்துள்ளது. பிரபுதேவா உடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு மீண்டும் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது.
மேலும் பிரபுதேவாவுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேச ஆரம்பித்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் இந்த நடவடிக்கை விக்னேஷ்சிவனை விரக்தியடைய வைத்திருக்கிறது, யாரை திருமணம் செய்ய போகிறார்..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Average Rating