இரக்கமின்றி வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற உரிமையாளர் மீது வழக்கு – வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 56 Second

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்னாலா மாவட்டத்தில் நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்பார் கிராமத்தைச் சேர்ந்த சத்பீர் சிங் என்பவர் தான் வளர்த்து வந்த நாயை கயிறால் கட்டி போட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த நாய் உயிருக்காக போராடி இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தது.

நாய் கொல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி சத்பீர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். வாயில்லா ஜீவனை இரக்கமின்றி சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நாய் மிகவும் தொந்தரவு செய்ததாகவும், வீட்டில் இருந்த விலங்குகளுக்கு தீங்கு விளைவித்ததாகவும் கூறினார். அதனால் தான் தனது நாயை சுட்டதாக கூறினார்.

இது குறித்து பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் தீங்கு விளைவித்தால் அதனை கொல்லக்கூடாது. பாதுகாப்பான இடங்களில் பராமரிக்க வேண்டும்.

இந்நிலையில், அவர்கள் மீது மிருகவதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படைப்பாளிகளை அச்சுறுத்த கூடாது: ஷாகித் கபூர்..!!
Next post ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே’ – வாசுதேவ் பாஸ்கர்..!!