“காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த ஆறு வயதுச் சிறுமியை கழுத்தறுத்துக் கொலை செய்த தாய்..!!

Read Time:2 Minute, 9 Second

தனது முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட ஆறு வயதுச் சிறுமியின் தாய், தனது காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியின் காஸிப்பூரைச் சேர்ந்தவர் இந்த 30 வயதுப் பெண். நேற்று முன்தினம் புதனன்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது கணவர் மது அருந்த வெளியே சென்றார்.

அவர் வரத் தாமதமாகும் எனத் தெரிந்ததால், குறித்த பெண் தன் காதலனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் வருவதற்குள் தனது ஆறு வயது மகளை கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கிவர அனுப்பினார்.

வீடு திரும்பிய சிறுமி தனது தாயும் காதலரும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

தந்தையிடம் சொல்லப் போவதாகக் கூறிய சிறுமியை தாயும் அவரது காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து மயக்க நிலைக்குக் கொண்டுசென்ற பின், சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

கொலைத் தடயங்களை காதலன் அகற்ற, தன் இளைய மகனை அழைத்துக்கொண்டு சிறுமியைத் தேடுவது போல் நடித்த அந்தத் தாய், கடைசியில் பொலிஸில் புகாரளித்தார்.

எனினும், சிறுமியின் உடல் வீட்டின் வெளியே சிறிது நேரம் கிடந்ததைக் கண்ட அயலவர்கள் பொலிஸாரிடம் அது பற்றித் தெரிவித்தனர்.

பொலிஸாரின் கடுமையான விசாரணையில் நடந்த உண்மைகளை அந்தப் பெண் கூறினார். இதையடுத்து, அந்தப் பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி..!!
Next post கடல் வழியாக 45 நாட்களில் உலகை சுற்றிவந்து பிரான்ஸ் வாலிபர் புதிய சாதனை..!!