உலகத்திலேயே பணக்கார நாய்

Read Time:2 Minute, 1 Second

உலகத்திலேயே பணக்கார நாய் எது என்று கேட்டால் அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள். நிïயார்க்கில் வசித்த ஓட்டல் அதிபர் லியோனா ஹெல்ம்ஸ்லி மரணம் அடைவதற்கு முன்பு தன் சொத்தான 42 கோடி ரூபாயை தான் வளர்த்த நாய் க்கு எழுதி வைத்தார். நாய் டிரபுள் கோடீசுவர நாயானது. இதன் பொறுப்பாளராக புளோரிடாவில் உள்ள ஓட்டல் மானேஜர் கார்ல் லெக்கி இருந்தார். நாய்க்கு கோடிக்கணக்கான சொத்தை எழுதி வைத்ததை எதிர்த்து லியோனாவின் உறவினர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த உயிலை எழுதியபோது லியோனா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் என்று அவர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர். அதோடு லியோனா பணத்தை செலவழிக்க விருப்பம் இல்லாத கஞ்சப்பேர்வழி என்றும் சொந்த பேரன் பேத்திகளுக்கு கூட பணத்தை எழுதி வைக்காமல் போய்விட்டார் என்றும் அவர்கள் குறை கூறினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ரெணி ரோத் நாய்க்கு ஒதுக்கப்பட்ட சொத்தை 7 கோடி ரூபாயாக குறைத்தார். 10 ஆண்டு காலம் நாயை பராமரிப்பதற்கு இந்த தொகை போதும் என்று அவர் தன் தீர்ப்பில் கூறி இருக்கிறார். பொறுப்பாளர் லெக்கிக்கு 21 லட்சம் ரூபாயும் ஒதுக்கி தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மீதி சொத்தை எல்லாம் பேரன் பேத்திகள் உள்ளிட்ட உறவினர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நளினி மனுவுக்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு
Next post அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு