போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?..!!
Read Time:1 Minute, 1 Second
மரியான் புகழ் நடிகை பார்வதி பேசிய ஒரு சில வார்த்தைகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்துவந்தனர்.
நடிகர் மம்மூட்டி நடித்த கசாபா படத்தில் வரும் வசனங்களை பற்றி பார்வதி ஒரு விழாவில் விமர்சித்தார். அதில் அதிருப்தியான மம்மூட்டி ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர். அது பற்றி நடிகர் மம்மூட்டியும் இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்நிலையில் இது பற்றி நடிகை பார்வதி எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகார் பற்றி சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating