மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்
மெக்சிகோ நாட்டின் இரவு நடன விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மெக்சிகோ நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மதுபான பார்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதையும் மீறி மதுபான பார்கள் மெக்சிகோவில் இயக்கப்படுவது சர்வசாதாரணமாகும். இந்த நிலையில் மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள நிïஸ் டிவைன் என்னும் இரவு நேர நடனவிடுதியுடன் இணைந்த மதுபான பார் ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கூடி மது அருந்துவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த நடன விடுதிக்குள் நுழைந்து சோதனை நடத்த முயன்றனர். போலீசைக் கண்ட மாணவர்கள் அனைவரும் மது போதையில் தலைதெறிக்க ஓட முயன்றனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அவசர காலத்தில் தப்பிக்க உதவும் எமர்ஜென்சி வாயிலை நோக்கி ஓடினார்கள். எமர்ஜென்சி வாயில் மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கு மிகுந்த நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் பல மாணவர்கள் கீழே விழுந்தனர். அவசர கதியில் ஓட முயன்றவர்கள் கீழே கிடந்தவர்கள் மீது ஏறி மிதித்தபடி வேகமாக சென்றனர். இதில், சிக்கிய மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்களில் 3 பேரது உடல்கள் இரவு விடுதியின் நுழைவு வாயில் அருகே கிடந்தன. பலியான மாணவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.
போலீசைக் கண்டு மிரண்டு ஓடியபோது ஏராளமான பேர் போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு ஏறிமிதித்து ஓடினார்கள். இதில் நடவடிக்கை எடுக்கச் சென்ற 3 போலீஸ் அதிகாரிகளும் சிக்கிக் கொண்டார்கள். அவர்களும் மூச்சுத் திணறி பலியானார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடிபோதையில் மிதந்த 30 இளைஞர்களும், இரவுநேர விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.
திடீர் சோதனை அல்ல
இது குறித்து மெக்சிகோ சிட்டி நகர போலீஸ் அதிகாரி ஜோயல் ஒர்டேகா கூறுகையில், `மிகச் சிறிய அவசரகால வாசல் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் இறந்துள்ளனர். சோதனை நடத்த வருகிறோம் என்று இரவு விடுதி உரிமையாளருக்கு தெரிவித்து விட்டுத்தான் அங்கு சென்றோம். இது திடீர் சோதனை அல்ல. வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் விடுதி உரிமையாளர் அலட்சியமாக இருந்து விட்டார்` என விளக்கம் அளித்தார்.
மாணவர்கள் அனைவரும், தங்களது பள்ளி ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்காக மதுபான பாருக்குச் சென்றபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating