கார் மோதி பயங்கரமாக தூக்கி வீசப்பட்ட நபர்: பின்னர் நடந்த ஆச்சர்யமான விடயம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 24 Second
கடந்த வாரம் புதன் கிழமை அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர் மீது பயங்கரமாக கார் மோதியதில் குறித்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
ஆனால், கார் தூக்கி வீசிய நபர் எதுவும் நடக்காதது போன்று எழுந்து மற்றொரு காரின் கதவை திறந்து சென்று விட்டார்.
இதையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்த கார் முன்னதாகவே ஒரு நபரை மோத முயன்றதாகவும், பின்னர் தான் இவரை மோதி தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், பொலிசார் இதுவரை கார் குறித்தும், விபத்துக்குள்ளான நபர் குறித்தும் எந்த தகவலும் தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த மருத்துவமனைகளில், விபத்துக்குள்ளான நபர் குறித்து விசாரணை நடத்தியதில், அப்படி யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்த பதிவும் இல்லை என தெரியவந்துள்ளது.
Average Rating