08.06.2008ல் சிலாபத்தில் ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..
ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்டம் சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ நகரில் 08.06.2008ல் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் திடீரென அங்கு வந்த இரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். குழுவில் அப்பகுதியின் பிரபல அரசியல் தலைவர்கள் இருவர் உள்ளடங்கியிருந்ததாகவும், சம்பவம் இடம்பெற்று நீண்ட நேரத்தின் பின்னரே அப்பகுதிக்கு பொலீசார் வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் சிலர் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். (இது முன்னைய செய்தி ஆனால் புகைப்படங்கள் தற்போது கிடைத்தவை!! மேலதிக புகைப்படங்களுக்கு..)
THANKYOU VERYMUCH FOR.. WWW.ATHIRADY.COM
Average Rating