ஜப்பானில் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது
Read Time:57 Second
ஜப்பானில் ஓம் ஷ்ரிணி கியோ என்ற மதப்பிரிவு ஷோகோ அசஹாரா என்ற சாமியார் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர் தன்சீடர்கள் 12பேரை விஷ வாயுவை சுரங்கப் பாதையில் செலுத்தி கொன்றார். இதனால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அவர் மனநலம் இல்லாதவர் என்றும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் அவருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விரைவில் நிறைவேற்றப்படுகிறது.