ஜனாதிபதியுடன் இணைந்த ஐ.தே.கட்சியினர்…!!(வீடியோ)
Read Time:1 Minute, 16 Second
கொலன்னாவை தொகுதியை சேர்ந்த ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள்
உறுப்பினர் சுனில் லெஸ்லி குருவிட்டஆராச்சி தலைமையில் 60 பேர் ஜனாதிபதியுடன் இணைந்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாகவும் சுனில் லெஸ்லி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Average Rating