நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 46 Second

நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் இந்தாண்டிற்கான பெரியார் விருது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி.க. தலைவர் வீரமணி அறிவித்துள்ளார்.

சென்னை:

1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், சென்னை முன்னாள் மேயரும், மராத்தான் வீரருமான சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகிய 11 பேருக்கு 2018-ம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை தி.க. தலைவர் வீரமணி அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காம விளைட்டுகளில் இதை மறந்துவிடதிர்கள்..!!
Next post மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு…!!