14 வயது மகனை எரித்துக் கொன்ற தாய்!!

Read Time:1 Minute, 45 Second

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14-ம் திகதி திடீரென்று காணாமல் போனான். இதுதொடர்பாக, அவனது தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தனது விட்டுக்கு அருகாமையில் எரிந்த கரிக்கட்டையாக பிணமாக கிடந்த சிறுவனின் உடலை பொலிஸார் நேற்று கண்டெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் ஜெயாமோள் அளித்த வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் பொலிஸார் சுமார் 44 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின்மீது சந்தேகப்பட்டனர். மேலும், அவரது கையிலும் தீக்காயம் இருந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துகள் தொடர்பான வாக்குவாதத்தில் தனக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயாமோள், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை உயிரிடன் எரித்துக் கொன்றதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, ஜெயாமோளை கைதுசெய்த பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயனுள்ள எளிய இயற்கை வைத்தியங்கள் சில…!!
Next post சினிமாவில் நடக்கும் கொடுமை – கதறி அழும் நடிகை! (வீடியோ)!!