பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை நடத்தும் ஓவிய கண்காட்சி
Read Time:1 Minute, 3 Second
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் தந்தை போல் சார்கோசி ஒரு ஓவியர். 80 வயதில் அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெட்ரிட் நகரில் ஓவிய கண்காட்சியை நடத்தினார். இதில் அவர் தீட்டிய 35 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரான்ஸில் ஏன் கண்காட்சி நடத்தவில்லை என்று கேட்டபோது, பிரான்ஸின் ஜனாதிபதியாக என் மகன் இருப்பதால் அவரது பதவியை பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்க விரும்பாததால், நான் ஸ்பெயின் நாட்டில் கண்காட்சியை நடத்தினேன். எனக்கு இந்த நாட்டில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
Average Rating