போதைப் பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது!!
Read Time:1 Minute, 5 Second
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் தலைமன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆதம்கே பாலத்துக்கு அருகில் கடல் பகுதியில் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோய்ன் என்று சந்தேகிக்கப்படுகின்ற 423 கிராமும் 900 மில்லிகிராம் அளவுடைய போதைப் பொருளும் 157 பீடீ பக்கட்டுக்களும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Average Rating