01 கிலோ கிராம் நிறையுடைய தங்க தகட்டுடன் இந்தியப் பிரஜை கைது!!
Read Time:51 Second
சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக அவற்றை நாட்டுக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் டுபாயில் இருந்து வருகை தந்த இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கிராம் நிறையுடைய தங்க தகடு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
Average Rating