கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை!!

Read Time:1 Minute, 6 Second

கம்பஹா, ​நெதகமுவயில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நெதகமுவ, தொடகொடவைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதோடு, இன்று (05) பிரேதப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெரோயினுடன் பொலிஸார் இருவர் கைது!!
Next post புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி!!